Abstract:
சமுதாய மேம்பாட்டுக்கு மதங்களுக்கிடையிலான நல்லுறவு இன்றியமையாதது. இலங்கையில் வாழும் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் மிக நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருப்பதுடன், இத்தொடர்பு ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பே நடைமுறையிருந்து வருவதைனையும், இவ் உறவு ஆப்ரகாம் காலத்திலிருந்து வலுவடைந்தது வந்தமையையும் இலக்கியங்கள் புலப்படுத்தி நிற்கின்றன. மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை எனக் குர்ஆனும், கடவுள் ஒற்றுமையைப் புரிந்து கொள்வதே உண்மையான வழிபாடு பைபிளும் போதிக்கின்றன. இரண்டு சமயங்களும் சமூக, சமய, அரசியல், பொருளாதாரக் கருத்தியல்களில் அதிக ஒற்றுமையைக் கொண்டுள்ளன. இத்தகையப் பின்புலத்தில் இலங்கையில் மூன்று தசாப்த கால யுத்தத்தின் காரணமாக மனித, பௌதீக, பொருளாதார, நிதி, வாழ்வாதார மூலங்கள் உட்பட மதங்களுக்கிடையிலான நல்லுறவும் குறிப்பிடத்தக்களவில் பாதிக்கப்பட்டிருந்தன. இவ் ஆய்வானது முசலிப் பிரதேசத்தில் போரின் பின்னரான கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதத்தவர்களுக்கு மத்தியிலான நல்லுறவின் போக்கினை ஆராய்வதுடன், அதனை மேம்படுத்துவதற்கான வழிவகைளைக் கண்டறிதலையும் நோக்கமாக கொண்டுள்ளது. பண்புசார் ஆய்வு வடிவத்தினைக் இவ் ஆய்வானது கொண்டிருப்பதுடன், முதலாம் நிலைத்தரவுசேகரிப்பு முறைகளாக நேர்காணல், கலந்துரையாடல்;கள், நேரடி அவதானம்; போன்றனவும், இரண்டாம் நிலைத்தரவு மூலங்களாக நூல்கள், சஞ்சிகைகள்;, இணையத்தளங்கள் என்பனவும் தகவல் திரட்டலுக்குப் பயன்படுத்தப்பட்டன. முசலிப் பிரதேச செயலர் பிரிவினை மையமாகக்; கொண்டு நோக்கம் கருதிய மாதியெடுப்பினடிப்படையில் இருபத்தியைந்து (25) பங்குபற்றுனர்கள் தெரிவுசெய்யப் பட்டதுடன், பண்புசார் ஆய்வாகையினால் தரவுகள் கருப்பொருள் பகுப்பாய்வு முறைக்குட்படுத்தப்பட்டன. யுத்தத்தின் பின்னரான மீள்குடியேறிய சூழலில் இவ்விரு சமூங்களுக்குமிடையிலான நல்லுறவு மற்றும் மதக் கலந்துரையாடல்கள் என்பன மிகவும் குறைவடைந்துள்ளதுடன், நிர்வாக மற்றும் அரசியல்சார் முரண்பாடு, காணிப்பிரச்சினை, எல்லை நிர்ணயப் பிரச்சினை, முன்னைய தொழில்நிலை மாற்றம், இடப்பெயர்வு, வீட்டுத்திட்ட ஒதுக்கீடுகள் தொடர்பான பிணக்குகள், அரசாங்கச் செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தலின் போதான முரண்பாடுகள், எதிர்மறையான மற்றும் வார்ப்பான எண்ணங்கள், கடந்த கால கிறிஸ்தவ-முஸ்லிம் சமுதாயங்கள் தொடர்பாக இரண்டாம் தலைமுறையினருக்குப் போதிய விழிப்புணர்வின்மை, இரு மதத்தவர்களுக்கிடையிலான ஒன்றுகூடலிற்கான வாய்ப்புக்களின்மை போன்ற காரணிகள் ஆய்வினூடாக கண்டறியப்பட்டன. இவ்விரு சமுதாயங்களும் ஒற்றுமையாக வாழ்வதற்கு வாய்ப்பாக ஒரே தொழில், மொழி மற்றும் பாடசாலை சூழல், நற்பழக்க வழக்கங்கள், சமூக மற்றும் சமய நிகழ்வுகளில் பங்கேற்பு போன்ற விடயங்கள் மீள்வலியுறுத்தப்பட்டதுடன், சமுதாயப் பிரதிநிதிகள் மற்றும் மதங்களுக்கிடையிலான கலந்துரையாடல், ஒன்றிணைந்து கலை, இலக்கிய நிகழ்வுகளை நடாத்தல், விசேட சமூக நிகழ்வுகளில் கலந்து கொள்ளுதல்; கலப்புத் திருமணத்தினைத் தவிர்த்தல், புதிய தலைமுறையுனருக்கு முன்னைய அனுபவங்கள் மற்றும் சம்பவங்களினூடாக ஒற்றுமையை எடுத்தியம்புதல், கல்வி நடவடிக்கைளினூடாக ஒன்று கூடுதலுக்கான வாய்ப்பினை ஏற்படுத்தல் போன்ற பல செயற்பாடுகளினுடாக இரு மதங்களுக்கிடையிலான நல்லுறவை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் போன்ற ஆலோசனைகள் பங்குபற்றுனர்களால் முன்வைக்கப்பட்டன.